கோவை ஈச்சனாரி கோவில் கழிவறையில் ஆண் சிசு சடலம் மீட்பு - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை!

கோவை: கோவை ஈச்சனாரி கோயில் கழிவறையில் ஆண் சிசு சடலத்தை வீசி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி கோயில் கழிவறையில் ஆண் சிசு சடலத்தை வீசி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஈச்சனாரி கோவில் கழிவறையில் நேற்று மாலை ஆண் சிசு சடலம் கிடப்பதாக தெரிய வந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரத்தக் கசிவுடன் இறந்துகிடந்த சிசு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர் கோவிலுக்கு வந்திருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அவர் கழிவறைக்கு சென்றபோது குழந்தை இறந்த நிலையில் பிறந்திருக்கலாம் என்றும் அவர் இந்த விவரங்களை மறைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று இருக்கலாம் என விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர். இறந்து கிடந்தது ஆறு அல்லது ஏழு மாத சிசு என தெரியவந்தது. போதுமான வளர்ச்சியின்றி சிசு காணப்பட்டது.

இதனிடையே, கோவிலுக்கு வந்து சென்ற கர்ப்பிணி பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் இருக்கும் கழிவறையில் சிசு இறந்து கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...