கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு வருமாறு கமலுக்கு சவால் விடுத்தார் ஸ்மிருதி இராணி. அதற்கு பதிலளித்த மக்கள் நீதி மையத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி. கே. குமரவேல், வானதி சீனிவாசன் போன்ற 'துக்கடா' அரசியல்வாதியிடம் விவாதிக்க மக்கள் நீதி மையத்தின் மாணவரணி போதுமானது என்று காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று கோவை சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், 'லிப் சர்வீஸ்' செய்பவர் கமல். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? என்று அவர் பேசியது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு விவாதத்திற்கு வருமாறு சவால் விட்டபோது என்னை ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் அழைத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக நான் கூறிய கருத்து தான் இது.
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன், ஆனாலும் நான் ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று முத்திரை குத்தப்பட்டேன் என்றும் வெளிப்படையான விவாதத்திற்கு நான் தயார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது, வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு வருமாறு கமலுக்கு சவால் விடுத்தார் ஸ்மிருதி இராணி. அதற்கு பதிலளித்த மக்கள் நீதி மையத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி. கே. குமரவேல், வானதி சீனிவாசன் போன்ற 'துக்கடா' அரசியல்வாதியிடம் விவாதிக்க மக்கள் நீதி மையத்தின் மாணவரணி போதுமானது என்று காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று கோவை சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், 'லிப் சர்வீஸ்' செய்பவர் கமல். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? என்று அவர் பேசியது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு விவாதத்திற்கு வருமாறு சவால் விட்டபோது என்னை ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் அழைத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக நான் கூறிய கருத்து தான் இது.
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன், ஆனாலும் நான் ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று முத்திரை குத்தப்பட்டேன் என்றும் வெளிப்படையான விவாதத்திற்கு நான் தயார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.