கோவை: இன்று மதியம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரித்து, தேர்முட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக கோவை வந்துள்ளார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: இன்று மதியம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரித்து, தேர்முட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக கோவை வந்துள்ளார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக பிரசார மேடைக்கு வர உள்ளனர். அந்த பேரணியில், யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உள்ளதால், கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு இருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோரங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலமாக வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் யோகி ஆதித்யநாத்க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய அமைப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டு அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கோவையின் உடைய முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.