கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 2 மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 2 மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ ஆய்வகங்களை நகர் நல அலுவலர் ராம்குமார், தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கொரோனா தடுப்பு டாக்டர் விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, நியூ ஸ்கீம் ரோடு மற்றும் காமராஜர் சாலையில் செயல்பட்டு வந்த இரண்டு மருத்துவ ஆய்வகங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஆஸ்பத்திரிகள் மருந்தகங்கள் ஆய்வகங்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றார்போல அபராதம் விதிக்கப்படும் என்றார்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தற்போது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பு முறைகளை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொள்ளாச்சி மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ ஆய்வகங்களை நகர் நல அலுவலர் ராம்குமார், தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கொரோனா தடுப்பு டாக்டர் விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, நியூ ஸ்கீம் ரோடு மற்றும் காமராஜர் சாலையில் செயல்பட்டு வந்த இரண்டு மருத்துவ ஆய்வகங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஆஸ்பத்திரிகள் மருந்தகங்கள் ஆய்வகங்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றார்போல அபராதம் விதிக்கப்படும் என்றார்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தற்போது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பு முறைகளை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.