திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அனுப்பர்பாளையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அனுப்பர்பாளையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பாஜக கட்சிக்கு அடிமையாக உள்ள அரசு வேண்டுமா..? என்ற கேள்விக்கான பதில் சொல்லக்கூடிய தேர்தலாக இது அமைந்திருப்பதாகவும், அடிமை அரசிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய மகத்தான கடமை நம்மிடத்தில் உள்ளதாகவும் பேசினார்.

மேலும், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட போது, மக்களை பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் அதிமுக எம்பிக்கள் அதற்கு ஆதரவளித்ததாக, குற்றம் சாட்டினார்.

தற்போது, பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுக்கு விற்பது குறித்து கேள்வி எழுப்பாமல் அதிமுக அமைதி காத்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சின் பினாமியாக இருப்பதாகவும், அதிமுகவிற்கு போடும் வாக்குகள் பாஜகவிற்கு தான் சாதகம் எனவும், மதவாத பிரிவினைவாத சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்காமல் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை மதசார்பின்மையை காப்பாற்ற கடுமையாக உழைத்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பாஜக கட்சிக்கு அடிமையாக உள்ள அரசு வேண்டுமா..? என்ற கேள்விக்கான பதில் சொல்லக்கூடிய தேர்தலாக இது அமைந்திருப்பதாகவும், அடிமை அரசிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய மகத்தான கடமை நம்மிடத்தில் உள்ளதாகவும் பேசினார்.
மேலும், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட போது, மக்களை பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் அதிமுக எம்பிக்கள் அதற்கு ஆதரவளித்ததாக, குற்றம் சாட்டினார்.
தற்போது, பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுக்கு விற்பது குறித்து கேள்வி எழுப்பாமல் அதிமுக அமைதி காத்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சின் பினாமியாக இருப்பதாகவும், அதிமுகவிற்கு போடும் வாக்குகள் பாஜகவிற்கு தான் சாதகம் எனவும், மதவாத பிரிவினைவாத சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்காமல் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை மதசார்பின்மையை காப்பாற்ற கடுமையாக உழைத்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.