கொரோனா காலத்தில் மக்களுடைய தேவைகளை உணர்ந்து, உதவியது திமுக மட்டும் தான் - கோவை வடக்கு வேட்பாளர் வ ம சண்முகசுந்தரம்

கோவை: கொரோனா ஊரடங்கு காலத்தில் திமுகவினர்தான் மக்களுக்கு உதவி செய்தனர் என்று திமுக வேட்பாளர் வ.ம.சண்முக சுந்தரம் தெரிவித்தார்.



கோவை: கொரோனா ஊரடங்கு காலத்தில் திமுகவினர்தான் மக்களுக்கு உதவி செய்தனர் என்று திமுக வேட்பாளர் வ.ம.சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம. சண்முகசுந்தரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

கோவில் மேடு பகுதியில் சாஸ்திரி வீதி, கலா மன்றம், மதுரை கோனார் வீதி, நல்லம்மாள் வீதி, திலகர் வீதி, பாரதியார் வீதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், தொடர்ந்து தடாகம் வீதி வழியாக காந்திநகர் வரை பரப்புரை மேற்கொண்டார்.

சண்முகசுந்தரத்துடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் வந்தனர். பரப்புரையின் போது அவருக்கு பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்

மக்கள் மத்தியில் சண்முக சுந்தரம் பேசியதாவது;



“கடந்த 10 ஆண்டு காலம் நடந்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட முன் வந்து விட்டனர். வேலாண்டிபாளையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கபாடுபடுவேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பேன். கொரோனா காலத்தில் ஆளுங்கட்சி தனது கட்சி ஆட்களுக்கு மட்டுமே பொருட்களை கொடுத்து உதவி செய்தது.

ஆனால் திமுகதான் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொருட்கள், உணவு கொடுத்தது. தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும்.” இவ்வாறு வ.ம.சண்முகசுந்தரம் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...