கோவை: நெசவாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதாக சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை: நெசவாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதாக சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்குறுதி அளித்துள்ளார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே ஆர் ஜெயராம் இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின்போது நெசவாளர்கள் மத்தியில் கலந்துரையாடியபடியே நெசவு செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.

தொடர்ந்து அனைத்து கம்மவார் நாயுடு சமுதாய பெரியோர்களை சந்தித்து ஜெயராம் ஆசி பெற்றார். நோய்த்தொற்று பரவல் காலத்தில் பொதுமக்களுக்கு நல உதவி பொருட்களை வழங்கிய ஜெயராமுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தான் வெற்றி பெற்ற பின் நடமாடும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மக்களைச் சந்தித்து அவர்கள் தெரிவித்த குறைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும் என மக்களிடம் ஜெயராம் உறுதி அளித்தார்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே ஆர் ஜெயராம் இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின்போது நெசவாளர்கள் மத்தியில் கலந்துரையாடியபடியே நெசவு செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து அனைத்து கம்மவார் நாயுடு சமுதாய பெரியோர்களை சந்தித்து ஜெயராம் ஆசி பெற்றார். நோய்த்தொற்று பரவல் காலத்தில் பொதுமக்களுக்கு நல உதவி பொருட்களை வழங்கிய ஜெயராமுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தான் வெற்றி பெற்ற பின் நடமாடும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மக்களைச் சந்தித்து அவர்கள் தெரிவித்த குறைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும் என மக்களிடம் ஜெயராம் உறுதி அளித்தார்.