பாலியல் வழக்கைப் பற்றி பேசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி; பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டி உள்ளார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும் சட்டபேரவை துணை தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக ஆதாரமில்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பரப்புரையின்போது பேசி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் பரப்பபுரை மேற்கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பாலியல் வழக்கில் என்னை உட்படுத்திப் பேசி உள்ளார். எனவே அவர் மீது வழக்குத்தொடர உள்ளேன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பொள்ளாச்சி திமுக வேட்பாளர், இந்த பாலியல் வழக்கை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார்.

பிரசாந்த் கிஷோரின் இரவல் மூளையைப் பயன்படுத்தி சபரிமாலா என்ற பெண்ணை பணம் கொடுத்து அழைத்து வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி திமுகவினர் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.” இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...