கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை பரப்புரை மேற்கொள்கிறார்.
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை பரப்புரை மேற்கொள்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை காலை 10.30 மணி அளவில் விமானம் மூலம் கோவை வருகிறார்.
அவருக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தலைமையில் விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் இருசக்கர வாகன பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்கிறார். இறுதியாக கோவை தேர் நிலை திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார மேடையில் யோகி ஆதித்யநாத், வானதி சீனிவாசனை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார்.
இதன் பின்னர் மாலை அவர் விமானம் மூலமாக உத்தரப்பிரதேசம் திரும்புகிறார். யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை காலை 10.30 மணி அளவில் விமானம் மூலம் கோவை வருகிறார்.
அவருக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தலைமையில் விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் இருசக்கர வாகன பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்கிறார். இறுதியாக கோவை தேர் நிலை திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார மேடையில் யோகி ஆதித்யநாத், வானதி சீனிவாசனை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார்.
இதன் பின்னர் மாலை அவர் விமானம் மூலமாக உத்தரப்பிரதேசம் திரும்புகிறார். யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.