நீலகிரி: சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீலகிரி: சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.

குன்னூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது;

“இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் அமைந்தவுடன் ஸ்டாலின்மகனாக இருந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.
ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் தான். அதன்பிறகு ஆறுமுகம்சாமி விசாரணை கமிஷன் முன்பு ஒருமுறைக் கூட ஓ.பி.எஸ் ஆஜராக வில்லை.
ஜெயலலிதா சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியவர்கள் இன்று வாயை திறக்காமல் உள்ளார்கள். திமுக ஆட்சியமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரியவரும்.

இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது மக்களை திண்டாட செய்தது மத்திய அரசு. கொரோனா காலகட்டத்தில் தொலைக்காட்சி முன் தோன்றி அனைவரையும் கைதட்டசொல்லி சமூக இடைவெளியில்லாமல் கொரோனாவை பரப்பியதே பிரதமரின் சாதனை, மக்களின் காதில் பூ சுற்றுவதுபோல கொரோனாவை பற்றி பேசியும் கூட இன்று கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை.
கொரோனா காலத்திலும், பொங்கல் பண்டிகையின்போதும் தி மு.க கொடுத்த அழுத்தத்தினால்தான் அரசு பணம் கொடுத்தது. அடுத்து வரும் திமுக ஆட்சி காலத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து நமது தமிழக மாணவர்களை நசுக்கியது இந்த அரசு. தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் தான் இந்த நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.
குன்னூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
“இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் அமைந்தவுடன் ஸ்டாலின்மகனாக இருந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.
ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் தான். அதன்பிறகு ஆறுமுகம்சாமி விசாரணை கமிஷன் முன்பு ஒருமுறைக் கூட ஓ.பி.எஸ் ஆஜராக வில்லை.
ஜெயலலிதா சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியவர்கள் இன்று வாயை திறக்காமல் உள்ளார்கள். திமுக ஆட்சியமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரியவரும்.
இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது மக்களை திண்டாட செய்தது மத்திய அரசு. கொரோனா காலகட்டத்தில் தொலைக்காட்சி முன் தோன்றி அனைவரையும் கைதட்டசொல்லி சமூக இடைவெளியில்லாமல் கொரோனாவை பரப்பியதே பிரதமரின் சாதனை, மக்களின் காதில் பூ சுற்றுவதுபோல கொரோனாவை பற்றி பேசியும் கூட இன்று கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை.
கொரோனா காலத்திலும், பொங்கல் பண்டிகையின்போதும் தி மு.க கொடுத்த அழுத்தத்தினால்தான் அரசு பணம் கொடுத்தது. அடுத்து வரும் திமுக ஆட்சி காலத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து நமது தமிழக மாணவர்களை நசுக்கியது இந்த அரசு. தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் தான் இந்த நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.