இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்டி சாலை மறியல்!

கோவை: இலங்கைக்கு ஆதரவாக ஐ நா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: இலங்கைக்கு ஆதரவாக ஐ நா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழத்தில் இனப்படுகொலை செய்த சிங்கள ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ நா மனித உரிமை ஆணையத்தில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்தன.

ஆனால், இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் மோடி தந்திரமாக ராஜ பக்சேவிற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்திருக்கிறார். இலங்கைக்கு ஆதரவளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்.

இலங்கையில் கொல்லப்பட்ட லடக்கண்கான தமிழர்கள் பெரும்பான்மையோர் இந்துக்கள் எனவும், முருகன், விநாயகர் கோவில் குண்டு வீசி தகர்க்கப்பட்ட போது இந்துக்களுக்காக மோடி குரல் கொடுக்கவில்லை என்றார். இதற்கு நியாயம் கேட்டுதான் கிறிஸ்துவ நாடுகள் தீர்மானம் கொண்டு வந்ததை பாஜக ஆதரிக்காமல், தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தெரிவித்தார்.



தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகனை ஆதரித்து நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கையில் மோடியே திரும்பி போ என்ற பதாகைகளை ஏந்தியவாறு பீளமேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழன விரோதி, மோடியே திரும்பிபோ, குஜராத்தில் இஸ்லாமியர்களை கொலை செய்த மோடியே திரும்பி போ, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரிக்காத மோடியே திரும்பி போ என மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 



சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...