கோவை: பிரதமர் விழாவிற்குச் சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பாதுகாப்பு காவலர்கள் வேன் விபத்து ஏற்பட்டதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
கோவை: பிரதமர் விழாவிற்குச் சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பாதுகாப்பு காவலர்கள் வேன் விபத்து ஏற்பட்டதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பாரதப் பிரதமர் மோடி வாக்கு சேகரித்துப் பேசவுள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, தாராபுரம் டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் காருக்கு முன்னால் சென்ற பாதுகாப்பு போலீசாரின் வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவருடைய காருக்கு வழிவிட்டு விழா மேடைக்கு அமைச்சரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். காயம்பட்ட இரண்டு பாதுகாப்பு போலீசார்கள் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டன. அனைவரும் சிறு காயத்துடன் சிகிச்சையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, சபாநாயகர் தனபால் சென்ற பாதுகாப்பு போலீசார் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவரையும் போலீஸ் பாதுகாப்போடு தாராபுரம் விழா மேடைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பாரதப் பிரதமர் மோடி வாக்கு சேகரித்துப் பேசவுள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, தாராபுரம் டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் காருக்கு முன்னால் சென்ற பாதுகாப்பு போலீசாரின் வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவருடைய காருக்கு வழிவிட்டு விழா மேடைக்கு அமைச்சரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். காயம்பட்ட இரண்டு பாதுகாப்பு போலீசார்கள் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டன. அனைவரும் சிறு காயத்துடன் சிகிச்சையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, சபாநாயகர் தனபால் சென்ற பாதுகாப்பு போலீசார் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவரையும் போலீஸ் பாதுகாப்போடு தாராபுரம் விழா மேடைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.