கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வீடுகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஓட்டு அளிப்பதற்கு சுகாதாரத்துறை போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வீடுகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஓட்டு அளிப்பதற்கு சுகாதாரத்துறை போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கொரோனா நோயாளிகள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு, தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி, சுகாதாரத்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. ஆனால், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சையில் இருப்பவர்கள், நேரடியாக சென்றால் மட்டுமே ஓட்டளிக்க முடியும். இவர்களிடம் இருந்து தொற்று பரவும் வாய்ப்புள்ளதால், பி.பி.இ., கவச உடையணிந்து சென்று, ஓட்டளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடைசி ஒரு மணி நேர ஓட்டுப்பதிவை, கொரோனா தொற்று பாதித்தவர்கள், பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நேரத்தில், ஓட்டுச்சாவடியில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும், கவச உடையணிந்து பணியில் ஈடுபடுவர்.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு எங்கு ஓட்டு இருக்கிறது என்பதை அறிந்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று ஓட்டளிக்க வைக்கும் திட்டத்தை செயல்படுத்த, சுகாதாரத்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...