மனைவி இறந்த வருத்தத்தில் கணவர் தற்கொலை ?



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவையில் பி.என்.புதூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் வீட்டின் கதவருகே சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்படவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சசிகுமார் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சசிகுமாரின் மனைவி உயிரிழந்துவிட்டதால் அவர் மனமுடைந்து  தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...