பொள்ளாச்சி சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தகுந்த பாடத்தை மக்கள் அதிமுகவிற்க்கு கற்பிக்க வேண்டும் - நெகமத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரப்புரை மேற்கொண்டார்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்: பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சையாக ஜெயராமனை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல வேண்டிய சபரிமாலாவின் வேட்பு மனுவை திட்டமிட்டு அதிமுகவினர் தள்ளுபடி செய்து விட்டு, தற்போது திமுகவிற்கு ஆதரவாக பேசி வரும் பெண் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சபரிமாலா மீது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.



தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யார் சொல்வது..? ஏற்கனவே, இங்கு பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. எனவே, பொள்ளாச்சி சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தகுந்த பாடத்தை மக்கள் ஜெயராமனுக்கு கற்பிக்க வேண்டும்.

சசிகலா காலில் விழுந்த முதலமைச்சர் ஆன எடப்பாடி, அவருக்கே துரோகம் செய்து விட்டார். நீட்டை ஒழிப்பேன் என்று தைரியத்துடன் சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான், என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

மேலும், இதைப் பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குப் பதியபட்டால் அதையும் சந்திக்க தயார் என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...