ஆ.ராசாவை கண்டித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை: ஆ.ராசாவைக் கண்டித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஆ.ராசாவைக் கண்டித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விகாஷ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ ராசாவின் உருவ படத்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாறிய விகாஷ் கூறியதாவது;



"திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல இயலாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயிரம் கருணாநிதிகள் வந்தால் கூட தமிழக முதல்வரின் தாய் தவுசியம்மாளுக்கு ஈடாக முடியாது. தன் மகனை தன்மானம் மிக்கவராக, நல்லவராக, மக்களுக்கு உதவும் குணம் உள்ளவராக, பாடுபட்டு உழைக்கும் விவசாயியாக அந்த தாய் மாற்றியிருக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமை மிக்க தாயாரை ஆ.ராசா இழிவுபடுத்தி பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு மகனை ரவுடியாகவும் மற்றொரு மகனை தத்தியாகவும் வளர்த்துள்ளார்.‌

பெற்ற மகனை யார் என சொல்லாமல் மறைத்து காட்டியிருக்கிறார். தாய்மார்களை இழிவு படுத்தும் ஆ. ராசாவின் செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்." இவ்வாறு விகாஷ் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...