கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும், வ.ம. சண்முகசுந்தரம் நேற்று மாலை சாய்பாபா காலனி உட்பட்ட 10, 11, 44, 45 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும், வ.ம. சண்முகசுந்தரம் நேற்று மாலை சாய்பாபா காலனி உட்பட்ட 10, 11, 44, 45 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பெருந்திரளாக கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், ஊழல் ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் பேசியதாவது:- வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் காலில் காயம் பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரது ஜாதகமும் வாக்காளர்களாகிய உங்கள் கையில் உள்ளது. இதில், யார் நல்லவர், மக்களுக்கு சேவையாற்ற கூடியவர் என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் பேரூராட்சி பொறுப்புகளில் பணியாற்றி உள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை நன்கு அறிந்து நிறைவேற்றி கொடுத்துள்ளோம். இந்த தொகுதி குறித்து எங்களுக்கு அனுபவ அறிவு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, நல்ல சாலைகளை தோண்டி மீண்டும் சாலை போட்டு பணத்தை கொள்ளையடித்துள்ள, அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற, திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தலைவர், மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழகம் அமையும் இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது, சாய்பாபா காலனி பகுதி கழக பொறுப்பாளர் ரவி பொறுப்புக் குழு உறுப்பினர் துரைசாமி. ஆனந்தகுமார், வடவள்ளி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெருந்திரளாக கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், ஊழல் ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது:- வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் காலில் காயம் பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரது ஜாதகமும் வாக்காளர்களாகிய உங்கள் கையில் உள்ளது. இதில், யார் நல்லவர், மக்களுக்கு சேவையாற்ற கூடியவர் என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் பேரூராட்சி பொறுப்புகளில் பணியாற்றி உள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை நன்கு அறிந்து நிறைவேற்றி கொடுத்துள்ளோம். இந்த தொகுதி குறித்து எங்களுக்கு அனுபவ அறிவு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, நல்ல சாலைகளை தோண்டி மீண்டும் சாலை போட்டு பணத்தை கொள்ளையடித்துள்ள, அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற, திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தலைவர், மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழகம் அமையும் இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது, சாய்பாபா காலனி பகுதி கழக பொறுப்பாளர் ரவி பொறுப்புக் குழு உறுப்பினர் துரைசாமி. ஆனந்தகுமார், வடவள்ளி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.