கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் 87வது வார்டில் உள்ள வெற்றிலைக்கார வீதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் 87வது வார்டில் உள்ள வெற்றிலைக்கார வீதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கலைஞரின் நெருங்கிய நண்பர், ராமு என்பவரது குடும்பத்தாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். கலைஞர் அவர்கள் திரைப்பட பாடல்கள் கதை, வசனம் எழுதி வந்த நாட்களில், ராமுவுடன் குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில், கலைஞர் தங்கியுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் குனியமுத்தூர் ராமு என்று பலராலும் அறியப்படுபவர், 1950-களில் கலைஞரின் மந்திரகுமாரி போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய போது ராமு அவர்களின் இல்லத்தில் ஒன்றாக தங்கியிருந்து கட்சி பணிகளையும் கவனித்து வந்துள்ளார். கலைஞர் எப்போது கோவை வந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராமூவை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார், என்பது கூடுதல் தகவல்.
மொழிப்போர் தியாகியான இவர் இறந்த பின்பு, அவரது மனைவி ராஜம்மாள், மகள் வசந்தா மற்றும் குடும்பத்தார் கோவையிலேயே வசித்து வந்தனர். இன்று அவர்களை மரியாதை நிமித்தமாக, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கார்த்திகேய சிவசேனாபதி நேரில் சென்று ஆதரவு தரும்படி கோரினார்.