தேசிய கல்விக் கொள்கையை நிராகரியுங்கள்; கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள்

கோவை: மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ நிராகரிக்கும்படி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ நிராகரிக்கும்படி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆதரவு கல்வியாளர் பு.ப.பிரின்ஸ்கஜேந்திரபாபு கோவை காந்திபுரம் தபெதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

“கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டம், மாநில அரசு தன் மாநில மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள அதிகாரம் அளிக்கிறது. கல்வி, மத்திய அரசு பட்டியலில் இல்லை; பொதுப் பட்டியலில்தான் உள்ளது.

மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அப்படியே மாநில அரசு பின்பற்ற வேண்டும், மாநில மக்களுக்காக கொள்கைகள் வகுக்கவும், சட்டம் இயற்றும் உரிமையும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தால், மாநிலச் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற வேண்டிய தேவையே இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் போக்கை தமிழக மக்கள் உணர வேண்டும்.கல்வித் துறையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. சமூகநீதியின் அடிப்படையில் வலுவான பொதுக்கல்வி அமைப்பு இங்கு உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்வியைச் சிதைப்பதோடு, பள்ளிகளையும், கல்லூரிகளையும் வேலைக்கான திறன் அளிக்கும் மையங்களாக மாற்றிவிடுகிறது. "நீட்" போன்ற திறன் அறி தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப் படும் என்றும் தேசியக் கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. இந்த ஆபத்தான கூறுகளை உணர்ந்து அதை நிராகரிக்க வேண்டும்.

சட்டப் பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில், மத்திய அரசின் புதியக்கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வாக்குறுதியை மிகத் தெளிவாக அளித்துள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு வாக்காளர்களைக் கோருகிறது.” இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறி உள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...