கோவை; கோவையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 250 பேர் திமுகவில் இணைந்தனர்.
கோவை; கோவையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 250 பேர் திமுகவில் இணைந்தனர்.
திமுக கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்டப் பொறுப்பாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிவேட்பாளருமான பையா (எ) ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கோவை மாநகர் மேற்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட, நாயக்கன்பாளையம் ஊராட்சி அதிமுகவைச் சேர்ந்த வர்த்தக அணி பொறுப்பாளர் முருகேஷ், ஊராட்சி மன்ற 5 வது வார்டு அதிமுக உறுப்பினர் செல்வி (எ) பத்மாவதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த விக்னேஷ், நந்தகுமார், விவேக், ஷ்யாம், நவீன், நரேஷ் ஆகியோர் தலைமையில் 200 இளைஞர்களும் இன்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.