கோவை: அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.
கோவை: அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், அமைதி,வளம்,வளர்ச்சி என்ற 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை 2021 புத்தகத்தை முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில், “பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்படும்,
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், பொள்ளாச்சியின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கொங்கு பண்பாட்டு மையம் மூலம் நூலகம் துவங்கப்படும்” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், அமைதி,வளம்,வளர்ச்சி என்ற 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை 2021 புத்தகத்தை முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில், “பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்படும்,
பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், பொள்ளாச்சியின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கொங்கு பண்பாட்டு மையம் மூலம் நூலகம் துவங்கப்படும்” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.