ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; முதல்வர் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி; முதல்வர் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசினார். அவரது பேச்சு பல தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்ணியமாக பேச வேண்டும் எனறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அறிவுறுத்தினார்.

ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தில் ஆங்காங்கே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திப் பேசிய ராசாவை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆ. ராசாவின் பேச்சு ஒட்டு மொத்த தாய்மார்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது போன்ற பேச்சுகளைத் தொடர்ந்து பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக வினர் எச்சரித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...