கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மாற்று வழியில் செயல்படுத்த நடவடிக்கை; குறிச்சி பிரபாகரன் உறுதி

கோவை: விவசாய விளைநிலங்களைப் பாதிக்கும் கோவை கிழக்கு புறவழிசாலை திடடத்தை மாற்று வழியில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் உறுதி அளித்துள்ளார்.


கோவை: விவசாய விளைநிலங்களைப் பாதிக்கும் கோவை கிழக்கு புறவழிசாலை திடடத்தை மாற்று வழியில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் உறுதி அளித்துள்ளார்.

கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காரணம்பேட்டையில் இருந்து எட்டிமடை வரை விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது விவசாயிகள் மத்தியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசியதாவது;



“காரணம்பேட்டை-எட்டிமடை இடையே, அதே போல் நரசிம்மநாயக்கன்பாளையம்-மேட்டுபாளையம் இடையேயான கோவை கிழக்கு 6 வழி பசுமை புறவழிச்சாலை திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

விவசாயத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். எனவே இந்தத் திட்டத்தால் பாதிக்கபடும் விவசாயிகள் திமுக தலைவரை சந்தித்து கோரிக்கைகளை எடுத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக விவசாய விளைநிலங்களை பாதிக்கும் கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த பாடுபடுவேன்.” இவ்வாறு திமுக வேட்பாளார் குறிச்சி பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...