கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும், பிரதமர் தேவையில்லை - கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம்.
கோவை தெற்கு தொகுதி வாக்கு சேகரிப்பின் போது, சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்தை கேட்க அதிகளவில் மக்கள் திரண்டனர்.
"இனி, கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படும் போது, மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியும்", என்று கமல்ஹாசன் பேசினார்.

நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்,
என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

பிரச்சாரத்தின் போது, அங்கிருந்த
கழிவுநீர் கால்வாயை சுட்டிக்காட்டி, சாக்கடைகளை சுத்தம் செய்ய கூட இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் இயலவில்லை. இந்நிலை மாற வேண்டும், என்றார் கமல்.
100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை, என்றார்.

"இனி, கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படும் போது, மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியும்", என்று கமல்ஹாசன் பேசினார்.
நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்,
என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
பிரச்சாரத்தின் போது, அங்கிருந்த
கழிவுநீர் கால்வாயை சுட்டிக்காட்டி, சாக்கடைகளை சுத்தம் செய்ய கூட இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் இயலவில்லை. இந்நிலை மாற வேண்டும், என்றார் கமல்.
100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை, என்றார்.