5,000 டன் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன; கோவை மாநகராட்சி தகவல்

கோவை; கோவையில் இதுவரை 5000 டன் கட்டடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கல்லுக்குழிகளில் கொட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை; கோவையில் இதுவரை 5000 டன் கட்டடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு கல்லுக்குழிகளில் கொட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகரின் பல பகுதிகளில் பழையக் கட்டடங்களை சீரமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என கட்டடப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக தினமும் 2 டன் வரை கட்டடக் கழிவுகள் சேகரமாகின்றன. மாநகராட்சி சார்பாக கட்டடக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட மாவட்டத்தில் உபயோகம் இல்லாத கல்லுக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மதுக்கரை, சூலூர் பகுதியில் உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள 2 கல்லுக்குழிகளில் மாநகரில் சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கல்லுக்குழிகளில் கட்டடக் கழிவுகள் மட்டும் தான் கொட்டப்படுகின்றன.இதுவரை சுமார் 5 ஆயிரம் டன் வரை கல்லுக்குழிகளில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன’’ என்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...