வால்பாறை தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்!

கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்துள்ளது. இந்த பறக்கும் படையில், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலக பணி நியமன அலுவலர் வெள்ளியங்கிரி தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது. தேர்தல் செலவின பார்வையாளரான ராம் கிருஷ்ணகெடியா தாம் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு மணி நேரத்திற்குள் ஆய்வுக்கு உட்படுத்தி, தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெள்ளிங்கிரி குழுவிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் பார்வையாளருக்கு பறக்கும் படை அதிகாரிகள் அறிக்கையை சமர்ப்பிக்காததால், வட்டார வளர்ச்சி பணி நியமன அலுவலர் வெள்ளியங்கிரி, வால்பாறை சரகத்தில் உள்ள நிலையான கண்காணிப்பு குழுவில் இருந்த காவலர்கள் பிரசாத் மற்றும் குமரவேல் ஆகிய மூன்று பேர் மீதும் தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகெடியா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நாகராஜன், விசாரணை நடத்தி அவர்கள் மூன்று பேரையும் பணியிட நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...