திருப்பூர்: திருப்பூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்றும், நாளையும் என 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்றும், நாளையும் என 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை அட்டைப் பெட்டியில் வைத்து ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது அட்டைப்பெட்டி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் காகிதத்தின் விலை 85 சதவீதம் வரை உயர்ந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரமான அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில்கொண்டு மத்திய அரசு காகிதத்தை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்த வேண்டும், காகிதம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் இன்றும், நாளையும் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை அட்டைப் பெட்டியில் வைத்து ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது அட்டைப்பெட்டி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் காகிதத்தின் விலை 85 சதவீதம் வரை உயர்ந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரமான அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில்கொண்டு மத்திய அரசு காகிதத்தை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்த வேண்டும், காகிதம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் இன்றும், நாளையும் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.