கோவை: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி அளித்துள்ளார்.
கோவை: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி அளித்துள்ளார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நகரப்பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று நகராட்சிக்குட்பட்ட 29 மற்றும் 30வது வார்டுகளில் அன்னை கஸ்தூரி பாய் வீதி, கலைவாணர் வீதி, நேரு நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று சிகிச்சை உள்ளிட்ட உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல, மகப்பேறு சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களுக்கும் முன்னோடியாக 200 தாய்மார்கள் தங்கும் வகையில் பிரசவ பகுதி கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் சிக்கலான பிரசவங்கள், பிரசவத்திற்கு பின்பு குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னோடி மருத்துவமனை தயாராகி வருகிறது.
மேலும், பொள்ளாச்சி மாவட்டமாக உருவான பிறகு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று தெரிவித்த ஜெயராமன், கருத்து கணிப்பு பிரசாந்த் கிஷோரின் கருத்து திணிப்பு, இதை மக்கள் நம்ப மாட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். கொரோனா காலத்தில் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நகரப்பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று நகராட்சிக்குட்பட்ட 29 மற்றும் 30வது வார்டுகளில் அன்னை கஸ்தூரி பாய் வீதி, கலைவாணர் வீதி, நேரு நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று சிகிச்சை உள்ளிட்ட உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல, மகப்பேறு சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களுக்கும் முன்னோடியாக 200 தாய்மார்கள் தங்கும் வகையில் பிரசவ பகுதி கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் சிக்கலான பிரசவங்கள், பிரசவத்திற்கு பின்பு குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னோடி மருத்துவமனை தயாராகி வருகிறது.
மேலும், பொள்ளாச்சி மாவட்டமாக உருவான பிறகு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று தெரிவித்த ஜெயராமன், கருத்து கணிப்பு பிரசாந்த் கிஷோரின் கருத்து திணிப்பு, இதை மக்கள் நம்ப மாட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். கொரோனா காலத்தில் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.