கோவை நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து மோசடி: தலைமறைவான மேலாளர், உதவி மேலாளருக்கு வலை, பெண் ஊழியரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

கோவை: கோவை நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து மோசடி செய்து தலைமறைவான மேலாளர், உதவி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் ஊழியரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர்.


கோவை: கோவை நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து மோசடி செய்து தலைமறைவான மேலாளர், உதவி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் ஊழியரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர்.

கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்காக நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள். இந் நிறுவனத்தில் குனியமுத்தூரைச் சேர்ந்த நித்தியானந்தன் (வயது 36) என்பவர் மேலாளராக வேலைபார்க்கிறார். மயிலேறி பாளையத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 24) என்பவர் துணை மேலாளராகவும், குனியமுத்தூரைச் சேர்ந்த ரம்யா(24) என்பவர் ஊழியராகவும் உள்ளனர்.

இந்நிலையில் தணிக்கை அதிகாரிகள் அந்த நிதிநிறுவனத்தில் நகைகளை சோதனை செய்தபோது 5 லட்சத்து 20 ஆயிரத்து 125 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து மேலாளர், துணை மேலாளர் மற்றும் பெண் ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் மூன்று பேரும் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் பணத்தை திருப்பித் தந்து விடுகிறோம் என்று கூறி அவகாசம் கேட்டனர்.

இந்நிலையில் மேலாளரும், உதவி மேலாளரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து ஏரியா மேலாளருக்கு தெரிய வந்ததும் அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நித்தியானந்தன் விக்னேஸ்வரன் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர். ஊழியர் ரம்யாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...