கோவையில் ஒரே நாளில் 3 கிலோ தங்க நகை, 30 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி!

கோவை: கோவையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஒரே நாளில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஒரே நாளில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும்வகையில் தேர்தல் பறக்கும்படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த வேனில் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் ஒரு பார்சல் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது 3 கிலோ 150 கிராம் தங்க நகைகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.



கோவை சவுரிபாளையம் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ஒரு வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோவையில் அடுத்தடுத்து பணம் நகை பறிமுதல் மக்கள் மத்தியில் பரபரப்பு கூடியுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...