திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு ஒப்பந்த ஊழியரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு ஒப்பந்த ஊழியரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திருப்பூர் வேலம்பாளையம் தியாகி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சந்திரன் தான் கையில் கொண்டு வந்திருந்த 3 லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரனின் தம்பி குமார் அவரது தாய் தனலட்சுமியை ஏமாற்றி 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதிக் கொண்டு தாயை அடித்து கொடுமைப் படுத்தியதாக கூறினார். மேலும் இதுகுறித்து பலமுறை போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது தம்பி குமாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரவேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்திரனை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் வேலம்பாளையம் தியாகி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சந்திரன் தான் கையில் கொண்டு வந்திருந்த 3 லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரனின் தம்பி குமார் அவரது தாய் தனலட்சுமியை ஏமாற்றி 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதிக் கொண்டு தாயை அடித்து கொடுமைப் படுத்தியதாக கூறினார். மேலும் இதுகுறித்து பலமுறை போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது தம்பி குமாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரவேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்திரனை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.