கோவை: கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இன்ஜினீயரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கோகிலா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 22-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய் சகிதமாக வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இன்ஜினீயரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கோகிலா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 22-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய் சகிதமாக வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.