திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெய ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெய ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஜெய ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தற்போது இவர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே, தனது சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவருக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு கிராமங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இவர் இன்று தனது சொந்த ஊரான துங்காவி காரத்தொழுவு மெட்ராத்தி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தனது செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால் இங்குள்ள வாக்காளர்களை சந்திக்க திறந்தவெளி ஜீப்பில் செல்லாமல் நடைபயணமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் தேநீர் விடுதி, பேருந்து கடை வீதிகளில் உள்ள கடைகள் போன்றவைகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஜெய ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தற்போது இவர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே, தனது சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவருக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு கிராமங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இவர் இன்று தனது சொந்த ஊரான துங்காவி காரத்தொழுவு மெட்ராத்தி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தனது செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால் இங்குள்ள வாக்காளர்களை சந்திக்க திறந்தவெளி ஜீப்பில் செல்லாமல் நடைபயணமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
மேலும் தேநீர் விடுதி, பேருந்து கடை வீதிகளில் உள்ள கடைகள் போன்றவைகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.