கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல்!

கோவை: கோவையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் தேர்தல் நெருங்குகின்ற சூழ்நிலையில் பறக்கும் படையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை உரிய ஆவணம் இன்றி கொண்டு வரக்கூடிய வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர்

இந்த நிலையில், கோவை இடையர் வீதியில் நேற்று, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஞானேந்திரன் என்பவர், தன் காரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,598 கிராம் தங்கம், 1,362 கிராம் வெள்ளி ஆகியவற்றை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை நகைக் கடைக்கு உரியவை என அவர் கூறினாலும், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, தேர்தல் அதிகாரி உத்தரவுபடி தங்கம், வெள்ளி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

அதேபோல, சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதியில் கோழிக்கூண்டுடன் வந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். லாரியில் வந்த சூலுார் கள்ளப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்த, 9.63 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், உப்பிலிபாளையம் ரோட்டில் வந்த சவுரிபாளையத்தை சேர்ந்த சிவா என்பவரிடம் இருந்து, 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க, தொகுதி தேர்தல் அதிகாரி ராம்குமார் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...