கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் இதுவரை செய்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் இதுவரை செய்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 30 லட்சம் வரை செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சவரம்பு வைத்திருக்கிறது. தொண்டர்களுக்கு சாப்பாடு, டீ வாங்கி கொடுப்பதில் துவங்கி தோரணம் கட்டுவது, பிரச்சார வாகனம் இயக்குவது உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் பட்டியலிட்டு அதற்குரிய தொகையை தேர்தல் ஆணையமே பட்டியலிட்டுள்ளது.
தொகை அடிப்படையில் செலவினங்களை பட்டியலிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பாக விளக்கக் கூட்டம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தேர்தல் ஷஷாங் திவேதி தேர்தல் நடத்தும் அலுவலர், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சுயேச்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். கொரோணா அதிகரித்து வருவதால் தேர்தல் பரப்புரை சமயங்களில் அதிக அளவில் கூட்டத்தில் சேர்க்கக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொண்டர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை செய்துள்ள தேர்தல் செலவினங்களை பட்டியலிட்டு 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பிரிவு அறிவுறுத்தினார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 30 லட்சம் வரை செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சவரம்பு வைத்திருக்கிறது. தொண்டர்களுக்கு சாப்பாடு, டீ வாங்கி கொடுப்பதில் துவங்கி தோரணம் கட்டுவது, பிரச்சார வாகனம் இயக்குவது உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் பட்டியலிட்டு அதற்குரிய தொகையை தேர்தல் ஆணையமே பட்டியலிட்டுள்ளது.
தொகை அடிப்படையில் செலவினங்களை பட்டியலிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பாக விளக்கக் கூட்டம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தேர்தல் ஷஷாங் திவேதி தேர்தல் நடத்தும் அலுவலர், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சுயேச்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். கொரோணா அதிகரித்து வருவதால் தேர்தல் பரப்புரை சமயங்களில் அதிக அளவில் கூட்டத்தில் சேர்க்கக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொண்டர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை செய்துள்ள தேர்தல் செலவினங்களை பட்டியலிட்டு 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பிரிவு அறிவுறுத்தினார்.