கோவை: தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவை, பாலக்காடு, திருச்சூர் எல்லை பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கோவை: தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவை, பாலக்காடு, திருச்சூர் எல்லை பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனை சாவடிகளான, வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றினை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதான சோதனை சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனை சாவடிகளான, வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றினை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதான சோதனை சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.