காவல்துறை ஆய்வாளர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்: பொள்ளாச்சி தேர்தல்அதிகாரியிடம் தி.மு.க. புகார்!

பொள்ளாச்சி: காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவான பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக பொள்ளாச்சி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.


பொள்ளாச்சி: காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவான பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக பொள்ளாச்சி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் கொரோனா காலத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்தார்.



இந்நிலையில் காவல் ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் தற்போது அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவாக பல பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி நெகமம் காவல்துறை ஆய்வாளர் உருவாக்கிய அந்த வாட்ஸ் அப் குழுவில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவாக தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் காவல்துறை ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...