வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில், காட்டு யானைகள் முகாமிடுவதும், இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, அடிக்கடி நடந்து வரும் சம்பவம் தான்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில், காட்டு யானைகள் முகாமிடுவதும், இதனால் தேயிலை
தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, அடிக்கடி நடந்து வரும் சம்பவம் தான்.
சம்பீபத்தில், காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள், ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை
இடித்து சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. புகார்களின் பேரில், வனத்துறையினரும் தேயிலைதோட்ட காவலர்களும்இணைந்து காட்டு
யானைகளை விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 8 காட்டு யானைகள் தாய்முடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. தொடர்ந்து, காலையிலிருந்து அப்பகுதியில் உள்ள தேயிலைத்
தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மருந்தடிக்கும் பணிகள் என அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.
மேலும், இரவு காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் வரலாம் என்று அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள்
வராமல் தடுத்திட வனத்துறையினரும் தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர்.
தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவிப்பது, அடிக்கடி நடந்து வரும் சம்பவம் தான்.
சம்பீபத்தில், காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள், ரேஷன் கடைகள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை
இடித்து சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. புகார்களின் பேரில், வனத்துறையினரும் தேயிலைதோட்ட காவலர்களும்இணைந்து காட்டு
யானைகளை விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 8 காட்டு யானைகள் தாய்முடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. தொடர்ந்து, காலையிலிருந்து அப்பகுதியில் உள்ள தேயிலைத்
தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மருந்தடிக்கும் பணிகள் என அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.
மேலும், இரவு காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் வரலாம் என்று அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள்
வராமல் தடுத்திட வனத்துறையினரும் தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர்.