திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஜெயராமகிருஷ்ணன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக ஜெயராமகிருஷ்ணன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஜெயராமகிருஷ்ணன். தற்போது இவர் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே, திமுகவில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் தனது பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். அதன்படி, முதல் நாளான இன்று தேவனூர்புதூர் ஊராட்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார் முழுக்க முழுக்க கிராமங்கள் மட்டுமே நிறைந்த தொகுதி என்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கைகளை வாசித்து பொதுமக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து 5 ஆண்டு காலம் செய்த சாதனைகள் குறித்தும் விளக்கமாகப் பேசுகிறார். முதல் நாளான இன்று ஆண்டியூர், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், சின்னபொம்மன் சாலை, உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஜெயராமகிருஷ்ணன். தற்போது இவர் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே, திமுகவில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் தனது பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். அதன்படி, முதல் நாளான இன்று தேவனூர்புதூர் ஊராட்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார் முழுக்க முழுக்க கிராமங்கள் மட்டுமே நிறைந்த தொகுதி என்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கைகளை வாசித்து பொதுமக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து 5 ஆண்டு காலம் செய்த சாதனைகள் குறித்தும் விளக்கமாகப் பேசுகிறார். முதல் நாளான இன்று ஆண்டியூர், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், சின்னபொம்மன் சாலை, உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.