கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கர்நாடகா மதுபானங்களை விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கர்நாடகா மதுபானங்களை விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொண்டாமுத்தூர் குளத்து பாளையத்தை சேர்ந்த திமுக கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் என்பவர் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் பிரியதர்ஷன், அமரன் என்ற இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தி கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரியதர்ஷனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது, அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் ஒரு குடோனில் ஒரு லட்சத்தி 9 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மதுவிலக்கு பிரிவினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சூழ்நிலையில், தப்பி ஓடிய பொன்ராஜ் மற்றும் அமரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி அருளரசு, தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும், என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொண்டாமுத்தூர் குளத்து பாளையத்தை சேர்ந்த திமுக கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் என்பவர் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் பிரியதர்ஷன், அமரன் என்ற இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தி கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரியதர்ஷனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது, அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் ஒரு குடோனில் ஒரு லட்சத்தி 9 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மதுவிலக்கு பிரிவினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சூழ்நிலையில், தப்பி ஓடிய பொன்ராஜ் மற்றும் அமரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி அருளரசு, தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும், என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.