கேரளாவில் இருந்து கோவைக்கு முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.3.75 லட்சம் பறிமுதல்!

கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி முட்டை ஏற்றி வந்த லாரியில் 3.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி முட்டை ஏற்றி வந்த லாரியில் 3.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் கொச்சின் பைபாஸ் சாலையில் கேரளாவிலிருந்து பெருந்துறைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்ததில், அந்த லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

லாரியை ஓட்டி வந்தவர் கார்த்திக் என்பதும், கேரளாவில் முட்டையை இறக்கிவிட்டு பணத்துடன் வந்தபோது பறக்கும் படையிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும்படை அதிகாரி சக்திவேல் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தார்.

இதுபோன்று இன்று காலை துடியலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பன்னிமடையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி 52 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே அதிகாரிகள் சோதனை செய்தபோது ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...