கேரளாவில் இருந்து கோவைக்கு முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.3.75 லட்சம் பறிமுதல்!

கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி முட்டை ஏற்றி வந்த லாரியில் 3.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி முட்டை ஏற்றி வந்த லாரியில் 3.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் கொச்சின் பைபாஸ் சாலையில் கேரளாவிலிருந்து பெருந்துறைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்ததில், அந்த லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

லாரியை ஓட்டி வந்தவர் கார்த்திக் என்பதும், கேரளாவில் முட்டையை இறக்கிவிட்டு பணத்துடன் வந்தபோது பறக்கும் படையிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும்படை அதிகாரி சக்திவேல் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் ஒப்படைத்தார்.

இதுபோன்று இன்று காலை துடியலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பன்னிமடையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி 52 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே அதிகாரிகள் சோதனை செய்தபோது ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து 97 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...