வால்பாறையில் தீ விபத்து: ஐந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் முழுமையாக சேதம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் முதல் பிரிவில், ஐந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், அனைத்து வீடுகளும் முழுமையாக சேதமடைந்தது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் முதல் பிரிவில், ஐந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், அனைத்து வீடுகளும் முழுமையாக சேதமடைந்தது.

இன்று மாலை சுமார் 4 மணி அளவில், கடுமலை எஸ்டேட் பகுதி நான்கில், முனிசாமி என்பவர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததது.



இதையடுத்து, அருகில் இருந்த கோவிந்தன், பால் முருகன், மாடசாமி என்ற நான்கு பேர் வீடுகளையும் தீப்பற்றி மளமளவென்று எரிந்தது.



வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று இருந்ததால், உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

தீயை அணைக்க பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



வீட்டில் இருந்த டிவி, பீரோ துணிமணி, பள்ளி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் நகை என அனைத்தும் எரிந்து சாம்பலானதால், அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து, வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...