கோவை: பொள்ளாச்சியில் பலவேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இதனிடையே, இச்சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், கோபிநாத், வினோத்குமார், சிவகுரு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இதனிடையே, இச்சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், கோபிநாத், வினோத்குமார், சிவகுரு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.