கோவை: சோலையாரில் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோவை: சோலையாரில் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட், மூன்றாவது டிவிஷன் பகுதியில் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வரன்(12) என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது.
அப்போது, பொதுமக்கள் சிறுத்தையிடம் சிக்கிய சிறுவனை மீட்டு பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்தனர்.
அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயம்பட்ட சிறுவனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட், மூன்றாவது டிவிஷன் பகுதியில் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வரன்(12) என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது.
அப்போது, பொதுமக்கள் சிறுத்தையிடம் சிக்கிய சிறுவனை மீட்டு பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்தனர்.
அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயம்பட்ட சிறுவனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.