வால்பாறையில் 12 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதால் படுகாயம்; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக, வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை சிறுத்தை வேட்டையாடித் கொன்று வந்தது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக, வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை சிறுத்தை வேட்டையாடித் கொன்று வந்தது,

மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் குடியிருந்து வரும் ஈஸ்வரன் என்பவர் மகன் ஆகாஷ் வயது 12, இன்று மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வெளியே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று ஆகாஷ் என்ற சிறுவனை தாக்கி கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் சிறுவனின் காலைப் பிடித்து இழுத்து சத்தம் போட்டு காப்பாற்ற முயற்சி செய்தனர். அதே சமயம், அப்பகுதியில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சந்திரன் மற்றும் ராஜன் என்ற இரு தொழிலாளர்கள் சிறுவர்கள் அலறும் சத்தத்தை கேட்டு அங்கு விரைந்தனர்.



உடனடியாக, சிறுவனை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை கொடுத்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மனிதர்களை தாக்க ஆரம்பித்துள்ள அந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...