கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா தொற்று..! மருத்துவமனையில் அனுமதி!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை சிங்காநல்லூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, 'கொரோனா' பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்கு போட்டியிடுவோரிடம் இருந்து, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் இரு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூருக்கு நியமிக்கப்பட்ட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, தெற்கு தாலுகா தாசில்தார் சரவணனுக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, தெற்கு தாலுகா அலுவலகத்திலும், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. தாலுகா அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் கொரோனா பரிசோதனைக்காக, சளி மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அடுத்த கட்டமாக, மாதிரி சேகரிக்க, சுகாதாரப்பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...