கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் என பெரும் படையோடு தனது தேர்தல் பிரச்சார வாகனத்தில், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் ஆதரவு கேட்டுக்கொண்டே பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை கொடுப்போம் என்றார்.
குண்டர்களை இறக்கி திமுகவினர் அராஜகம் செய்வதாக எஸ். பி. வேலுமணி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கார்த்திகேய சிவசேனாபதி, குண்டர்கள் இறக்கி அராஜகம் செய்கிற அளவிற்கு எங்களிடம் பண பலம் இல்லை. அவை அனைத்தும் செய்வது எஸ். பி. வேலுமணி தான் என்று கூறினார்.
மேலும், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் பட்சத்தில் எஸ்.பி.வேலுமணியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.