கோவை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று கிணத்துக்கடவு வருவாய்த்துறை சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் இருசக்கர வாகனங்களில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வருவாய்த்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி இன்று கிணத்துக்கடவு வருவாய்த்துறை சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் இருசக்கர வாகனங்களில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வருவாய்த்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.