பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் SP வேலுமணி, பி.ஜே.பி., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயராமன் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேட்பாளர் அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, “திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது. பொது மக்கள் யாரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் SP வேலுமணி, பி.ஜே.பி., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயராமன் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேட்பாளர் அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, “திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது. பொது மக்கள் யாரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.