பொய்பிரச்சாரம் செய்வதுதான் திமுகவின் வேலை; அமைச்சர் வேலுமணி கடும் தாக்கு

பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.


பொள்ளாச்சி; சமூக வலைதளங்களின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்புவதுதான் திமுகவின் வேலையாக இருக்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் தொடுத்துள்ளார்.



பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.



இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் SP வேலுமணி, பி.ஜே.பி., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயராமன் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேட்பாளர் அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, “திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது. பொது மக்கள் யாரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...